14 February 2010

முஸ்லிம் பெண் முகம் மறைத்தல் - கலந்துரையாடல்!


Subject: முஸ்லிம் பெண் முகம் மறைத்தல் - கலந்துரையாடல்!
------------------------

From: muslim <tomuslim@Date: 2010/1/18
To: fromgn@googlegroups.com


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்  

அன்புச் சகோதரர் Mohamed hussain Fazly அவர்களுக்கு, உங்களுடன் சிறு கலந்துரையாடல்.

//24 :31 இல்லாஹ் மா லஹர மின்ஹா இது லாசிமான வினை.இந்த வசனத்தில் இருந்து பொருள் எடுக்க முடியாது முகத்தையும் முன் கையையும் திறப்பதற்கு ஏனெறால் இதற்கு பொருள் தானாக வெளியாவது என்பதே ஒழிய வேண்டுமெண்டே காட்டுவது கிடையாது.இந்த ஆயத்தில் நின்று இவர்கள் விளக்கம் எடுப்பதாக இருந்தால் ஒரு பெண் முகத்தையும் முன்கை உட்பட முழுமையாக மறைக்கப்பட வேண்டும் என்பதே அந்த விளக்கம் . இல்லாஹ் மா லஹர மின்ஹா தானாக வெளியாவதை தவிர மற்றதை காட்ட கூடாது.
முகத்தையும் முன்மநிகட்டும் மறைக்க கூடாது என்பதற்கு இவர்களிடம் என்ன ஆதாரம் என்றால் ஹதீஸில் வந்துள்ளது என்பதே. இந்த ஹதீஸ்களுக்கு விளக்கமாக இந்த ஆயத்தை வலைத்தார்களே ஒழிய இந்த ஆயத்தில் நின்று விளக்கம் கொடுக்கவில்லை. உண்மையான விளக்கம் //

அன்புச் சகோதரர் Mohamed hussain Fazly அவர்களுக்கு, உங்களுடன் சிறு கலந்துரையாடல்.

மேல்கண்டவை

முஸ்லிம் பெண் முகம் மறைத்தல் வேண்டும் என வேறு இழையில் நீங்கள் எழுதிய விளக்கமிது!

''இல்லா மா லஹர மின்ஹா'' - ''தானாக வெளியாவதைத் தவிர'' என அர்த்தப்படுத்தியுள்ளீர்கள். ''தானாக வெளியாவதைத் தவிர'' என்றால் அது எவ்வாறு? என்பதை இன்னும் கூடுதல் விளக்கத்துடன் சொல்லுங்கள்.

மேலும், இறைமறை 24:30,31 வசனங்களில் மூஃமினான ஆண்களுக்கும், மூஃமினான பெண்களுக்கும் என இரு பாலினருக்கும் சேர்த்தே பார்வைளைத் தாழ்த்திக் கொள்ளும்படி அல்லாஹ் கூறுகிறான். ஆண் முகம் மறைக்காமல் இருப்பதால் அங்கு பார்வைகள் சந்திக்காமல் இருக்க என்ற கருத்து கொண்டு, பெண்கள் பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும் என்பது சரியே!

பெண்கள் முகத்திரை அணிந்திருந்தால் பார்ப்பதற்கு எதுவுமே இல்லை. எனும்போது ஆண்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும் என்பது இங்கு பொருத்தமாக இல்லை. அதாவது, பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும் என்று சொல்வது ஒரு செயலைத் தவிர்த்துக்கொள்ளும்படி இடும் கட்டளையாகும். அந்தக் கட்டளை இருபாலினருக்கும் பொருத்தமாக இருக்க வேண்டும். ஏனெனில் இரு சாராருக்கும் ஒரே மாதியாக ''பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும்'' எனச் சொல்லப்படுகிறது. இதையும் சற்று விளக்கவும்.

பெண்கள் முகத்திரை அணிந்து பார்வைக்காக கண்கள் மட்டும் திறந்திருக்கலாம் என்று சொன்னால் கண்கள் முகத்தின் ஒரு பகுதியாகும். என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

குறிப்ப:- இது கலந்துரையாடல் மட்டுமே என்பதால் குழும சகோதர, சகோதரிகள் அனைவரும் மார்க்க ஆதாரங்களின் அடிப்படையில் கருத்துகளை இங்கு பதிவு செய்யலாம்.  

----------
From: <ibnuhassan@mail.com>
Date: 2010/1/18
To: fromgn@googlegroups.com


 நன்றி அன்புச் சகோதரர்.....முஸ்லிம்.....
சகோ.....இது சம்பந்தமாக வர உள்ள எனது பதிலில் நான் கேட்க இருந்ததை நீங்களே  கேட்டுவிட்டீர்கள்... நன்றிகள்... இதற்கு சகோ....FAZLY , பதில் அளிக்க வேண்டும்....... அத்துடன் முகம் கை மூடனும் என்போருக்கு பல கேள்விகள் உண்டு......பல கேள்விகள் உண்டு...... நான் இசை பற்றிய  இழையை பூர்த்தி செய்ய வேண்டி இருப்பதால் ,  ஆய்வு  பதில் தமதம்மாகும்...  சகோ..முஸ்லிம்  உதவுங்கள்...

----------
From: Mohamed hussain Fazly <fazlylk@Date: 2010/1/18
To: fromgn@googlegroups.com



 அஸ்ஸலாமு அழைக்கும்,

சஹோதரர் முஸ்லிம் அவர்களின் கேள்வி தானாக வெளியாவது என்றால் அது எவ்வாறு என்பதே அது எவ்வாறு என்பதை வேறு இலையில் சொல்லியுள்ளேன் அதாவது என் கையில் இருந்து கண்ணாடி விழுந்தது,என் கையில் இருந்த கண்ணாடியை கீழே போட்டேன்இந்த இரண்டில் எது தானாக விழுந்தது என்பதை அறியாதவர் அல்ல 
முஸ்லிம் என்பவர்.சஹோதரர் அவர்களே இந்த ஆயத்திற்கு நான் செய்த அர்த்தம் சரியா பிழையா?
முதலில் இதை முடிப்போம் .   
----------
From: muslim <tomuslim@Date: 2010/1/18
To: fromgn@googlegroups.com


24:31வது வசனத்தில் இடம்பெறும் ''ஜீனத்'' என்ற பதம் ''அலங்காரம்'' எனப் பொருள் தரும். என்றக் கருத்தில் உள்ளேன் என்பதைப் பதிவு செய்துகொள்கிறேன்!

''அலங்காரத்தில் வெளியே தெரிவதைத் தவிர'' என சாதாரணமாக விளங்க வேண்டிய சொற்றொடரை,  ''தானாக'' வெளியாவதைத் தவிர என்று அலங்காரம் தானியங்கியாக வெளியாவதைப் போன்று அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு ''தானாக'' வெளியாவது என்பதே நெருடலாக உள்ளது. அதற்கான விளக்கம் தந்தால் நன்று!

மேலும்,

பெண்கள் நான்கு விஷயங்களுக்காக மணமுடிக்கப்படுகிறார்கள். அதில் ஒன்று, ''பெண் அழகுக்காகவும் மணமுடிக்கப்படுவார்'' என்ற நபிவழி அறிவிப்புகள் - புகாரி, 5090, முஸ்லிம் 2905 ஆகிய நூல்களில் - பதிவு செய்யப்பட்டுள்ளன.

பெண் அழகுக்காகவும் மணமுடிக்கப்படுவார் என்பதை வெளிப்படையாக விளங்குவதென்றால் அந்தப் பெண்ணின் அழகைப் பார்த்திருக்க வேண்டும். முகம் உள்பட தன்னை முற்றாக மறைத்துக்கொண்ட பெண்ணிடம் அழகு வெளிப்பட வாய்ப்பில்லை.

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, தாம் அன்சாரிகளில் ஒரு பெண்ணை மணமுடிக்கப் போவதாகத் தெரிவித்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ''நீர் அந்தப் பெண்ணைப் பார்த்து விட்டீரா? ஏனெனில் அன்சாரிகளின் கண்களில் சிறிது (குறை) உள்ளது'' என்றார்கள். அதற்கு அந்த மனிதர் ''அந்தப் பெண்ணைப் பார்த்து விட்டேன்'' என்றார். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) (நபிமொழிச் சுருக்கம். நூல் - முஸ்லிம் 2783, 2784)

திருமணத்திற்காகப் பெண் பார்க்கும்போது பெண் முகத்தைப் பார்க்க நேரடியாக மேல்கண்ட அறிவிப்பு அனுமதிக்கிறது. ஒரு அன்னியப் பெண்ணின் முகம் பார்க்கவும், பார்த்ததாகவும் இந்த செய்தி உறுதிப்படுத்துகிறது.  பெண் அழகுக்காகவும் மணமுடிக்கப்படுகிறார் என்பதும் முக அழகையேக் குறிப்பிடுகின்றது என்பது நமது நிலைபாடு.

மாற்றுக் கருத்துடையோர் பகிர்ந்துகொள்ளலாம்.

----------
From: Mohamed hussain Fazly <fazlylk@Date: 2010/1/18
To: fromgn@googlegroups.com


"ஜீனத்" என்ற பதத்துக்கு சஹோதரர் ஜி.என் அவர்கள் முகம்,முன்கை என்று பெண்ணின் இயற்கை அழகை குறிப்பிடுகிறார் அவரும் இந்த ஆயத்தை வைத்து முகம் முன்கை திறக்கலாம் என்று சொல்கிறார் நீங்களும் முகம் முன்கை திறக்கலாம் என்று சொல்கிறீர்கள் ஆனால்" ஜீனத்" அலங்காரம் என்று சொல்கிறீர்கள் இதில் எது சரி. இவ்வாறு முரண்படுவதால் உங்களுடைய வாதங்கள் பலஹீனம் அடைகின்றது .

சரி ஜீனத் என்றால் இயற்கை அழகு என்று ஜி,என் கூறுகிறார் அது முகம்,முன்கை என்றும் கூறுகிறார் இது ஆயத்தில் இல்லை இவரின் விளக்கம். ஆயத்தில் நின்றுவிளக்கம் கொடுங்கள் ஏற்று கொள்கிறோம் 
சஹோதரர் முஸ்லிம் அவர்களே "ஜீனத்"என்பது  அலங்காரம் என்று சொன்னால் அந்த ஆயத் இவ்வாறு வரும்
"அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம்" இதில்  வரும் அலங்காரம் ஆடையை குறிக்கும் என்று நீங்கள் சொல்கிறீர்களா அப்படி என்றால் மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம் என்று சொன்னால் முழுமையாக வெளிப்படுத்த கூடாது என்பது தானே அர்த்தம்.உங்களின் வாதம் பிரகாரமும் என்னுடைய கருத்து நிலை பெற்று விட்டதே.

அலங்காரத்தில் வெளியே தெரிபவை என்றால் என்ன இதை தெளிவு பத்தவும்.    

----------
From: Abu Ali <al_ameen@Date: 2010/1/18
To: fromgn@googlegroups.com


 Assalamu Alaikum..
 
One Doubt brother..
 
//திருமணத்திற்காகப் பெண் பார்க்கும்போது பெண் முகத்தைப் பார்க்க நேரடியாக மேல்கண்ட அறிவிப்பு அனுமதிக்கிறது.//
Ok.. I accept it..
 
 
//ஒரு அன்னியப் பெண்ணின் முகம் பார்க்கவும், பார்த்ததாகவும் இந்த செய்தி உறுதிப்படுத்துகிறது.//
In this versus, what will u come to say?.. Do you say that Islam allows to see a girl/women, even she is proper or not?
 

----------
From: muslim <tomuslim@Date: 2010/1/18
To: fromgn@googlegroups.com

24:31வது வசனத்தில் வரும் ''ஸீனத்'' என்ற பதம் அலங்காரத்தையே குறிப்பிடும் என்பதை நமது தரப்பில் உறுதிப்படுத்தியுள்ளோம். இயன்றால் உங்கள் சார்பில் கருத்து மாற்றம் இருப்பின் அதைத் தெளிவுபடுத்துவும்.

மேலும், ஆதாரங்களின் அடைப்படையில் கருத்துகள் இருக்கவேண்டும் என்பதை நீங்களும் ஒப்புக்கொண்டுள்ளீர்கள். பிறகு ''அவரு சொல்றாரு, இவரு சொல்றாரு'' என்ற வியாக்கினங்கள் இங்கு அவசியமற்றது.

நாம் கேட்டது ''தானாக'' வெளியாவதைத் தவிர என்று நீங்கள் எழுதிய உங்கள் கருத்தில் ''தானாக'' என்பதின் மேலதிக விளக்கம் தாருங்கள் எனக் கேட்டிருந்தோம் அதற்கு விளக்கம் தாருங்கள்.

24:31வது வசனத்தின் கருத்துப்படி பெண்களின் செயற்கை அலங்காரத்தில் வெளியே தெரியக்கூடியவை - வெளிப்படுத்துவை எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். அலங்காரம் என்பது செயற்கையாகச் செய்வது. கண்ணுக்கு மை இடுதல், கை மணிக்கட்டில் அணியும் வளையல்கள், கைச்செயின்கள், மற்றும் விரல்களில் அணியும் மோதிரங்கள். இவை வெளிப்படும் செயற்கை அலங்காரங்களாகும்.

ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரன் வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது (அதில் தலையிட்டு தமக்காக) வியாபாரம் செய்யவேண்டாம். தம் (முஸ்லிம்) சகோதரன் பெண் பேசிக்கொண்டிருக்கும்போது (குறுக்கிட்டுத்) தமக்காக பெண் பேசவேண்டாம். முதலில் பேசியவர் இவருக்கு அனுமதியளித்தால் தவிர! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்தக் கருத்தில் நபித்தோழர்கள் இப்னு உமர் (ரலி) அபூஹூரைரா (ரலி) இருவரின் அறிப்புகள் புகாரி 2140, 2148, 2150,2151, 2160, 2162,2723, 2727, 5144, 5152, 6601. முஸ்லிம் 2759 - 2765)

முஸ்லிம் நூலில் இடம்பெறும் உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்களின் அறிவிப்பில்  ஏற்கெனவே பெண் பேசுபவர் கைவிடும் வரை மற்றவர் தமக்காக பெண் பேசவேண்டாம் என்ற கருத்தில் வாசகங்கள் உள்ளன.

ஒருவர் பெண் பேசும்போது அதேப் பெண்ணைத் தமக்காக இன்னொருவர் பெண் பேச முன்வரக்கூடாது. முன்னர் பேசியவர் அனுமதிக்கும் வரை. அல்லது அவர் கைவிடும் வரை அதில் மற்றொருவர் குறுக்கிட வேண்டாம் என்பது நபி (ஸல்) அவர்களின் வாக்கு!

திருமணத்திற்காக பெண் தேர்வு செய்யும் நேரத்தில் பெண் பேசுபவருக்கு அந்தப் பெண் அந்நியப் பெண்! விருப்பம் இல்லாமல், ஒப்புதல் இல்லாமலும் திருமணம் வரை செல்லாமல் பேச்சு வார்த்தையோடு முடியும் பெண் பேசும், பெண் பார்க்கும் காரியத்தோடும் நின்றுவிடுவதுண்டு.

திருமணத்திற்கு முன்பே பெண்ணைப் பார்த்துக்கொள் என்று ரஸுலல்லாஹ் கூறுகிறார்கள். ''பார்த்துக்கொள்'' அதுவும் முகத்தைப் பார்த்துக்கொள் என்ற அனுமதி, பார்த்த பிறகு பெண்ணிடம் குறை இருக்குமெனில் அதன் பின்னும் பெண் பேசுவதைக் கைவிடலாம், அல்லது மன ஒப்புதலுடன் திருமணம் செய்து கொள்ளலாம். என்றும் விளங்குகிறது.

மேலும், அன்னியப் பெண்ணின் முகத்தைப் பார்க்கலாகாது என்ற சட்டம் குறித்து வரும் அறிவிப்புகள்.

நபிமொழிகள்

''நான் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம், ஏதேச்சையாக (அன்னியப் பெண் மீது) பார்வை விழுவதைப் பற்றிக் கேட்டேன். அப்போது எனது பார்வையை (உடனடியாகத்) திருப்பிக்கொள்ள வேண்டுமென அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்" அறிவிப்பவர் ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) (நூல்கள் - முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத்)

"அலியே! எதிர்பாராது அன்னியப் பெண்ணைப் பார்க்க நேரிட்டால் மீண்டும் பார்க்காதே!. ஏனெனில் முதல் பார்வை உனக்கு (அனுமதிக்கப்பட்டு) உள்ளது. இரண்டாம் பார்வை (அனுமதிக்கப்பட்டது) இல்லை" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் புரைதா (ரலி) (நூல்கள் - திர்மிதீ, அபூதாவூத்)

உங்களில் ஒருவரை ஒரு பெண்(ணின் அழகு) கவர்ந்து அவரது உள்ளத்தில் தவறான எண்ணம் தோன்றினால் உடனே அவர் தம் மனைவியை நாடிச் சென்று அவளுடன் உறவு கொள்ளட்டும். ஏனெனில் அது அவரது மனதில் தோன்றும் (கெட்ட) எண்ணத்தை அகற்றிவிடும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள் - முஸ்லிம் 2718. திர்மிதீ)

இந்த அறிவிப்புகளிலிருந்து, அன்னியப் பெண்ணைப் பார்க்கலாம், தீய எண்ணத்துடன் - சபலத்துடன் பார்க்கலாகாது. தேவையின்றிப் பார்ப்பதே தடைசெய்யப்பட்டதாகும். என்றே விளங்க முடிகிறது.

மூஃமினான ஆண்கள் பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும் (24:30) என்ற வசனத்தின் கருத்திலிருந்தும் எதிரே வருவது பெண்ணாக இருந்தால் பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும் என ஒரு முறை பார்ப்பதற்கான அனுமதியாகும்.  

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் மீது அவதூறு சுமத்திய செய்தியின் அறிவிப்பில் ஸஃப்வான் இப்னு முஅத்தல் அல் ஸுலமீ (ரலி) அவர்கள் தனியாக தூங்கிக்கொண்டிருந்த ஆயிஷா (ரலி) அவர்களின் முகத்தைப் பார்த்தே இவர் நபியவர்களின் துணைவியார் என்று தெரிந்து கொள்கிறார். (புகாரி 2661)

எனவே, பொது இடங்களில் சந்தர்ப்பம், சூழ்நிலைகளையோட்டி தேவையின் நிமித்தம் அந்நியப் பெண்ணைப் பார்ப்பது பெரும் குற்றமென
நாமறியவில்லை்
 
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, தாம் அன்சாரிகளில் ஒரு பெண்ணை மணமுடிக்கப் போவதாகத் தெரிவித்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ''நீர் அந்தப் பெண்ணைப் பார்த்து விட்டீரா? ஏனெனில் அன்சாரிகளின் கண்களில் சிறிது (குறை) உள்ளது'' என்றார்கள். அதற்கு அந்த மனிதர் ''அந்தப் பெண்ணைப் பார்த்து விட்டேன்'' என்றார். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) (நபிமொழிச் சுருக்கம். நூல் - முஸ்லிம் 2784)
 
நாம் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ள நபிமொழியின் ஹைலைட் வாசகங்களை மீண்டும் படித்தால், ஒரு அன்னியப் பெண்ணின் முகம் பார்க்கவும், பார்த்ததாகவும் என்று நாம் எழுதிய கருத்து புரியலாம். அதோடு, ஒரு பெண் அழகுக்காகவும் திருமணம் செய்யப்படுகிறார் என்கிற அறிவிப்பையும் இத்துடன் இணைத்து சிந்தியுங்கள்!

(அல்லாஹ் மிக அறிந்தவன்) 

----------
From: Abu Ali <al_ameen@
Date: 2010/1/19
To: fromgn@googlegroups.com


 
அன்பு சகோதரர்க்கு  அஸ்ஸலாமு அழைக்கும். தங்களுடைய பதில் அழகிய முறையில் பதித்து உள்ளீர்கள். அந்நிய பெண்களை பார்பது கூடாது. திருமணம் செய்து கொள்ள கூடிய பெண்களை முகம் பார்த்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறுகிறீர்கள். சரிதானே?
 
 
~Abu
----------
From: Abu Ali <al_ameen@
Date: 2010/1/19
To: fromgn@googlegroups.com


 அஸ்ஸலாமு அழைக்கும்.  

நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக.அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும்.. மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன். மிக்க அன்புடையவன்.(33:59) 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் கூறுகின்றார்கள் 

இஹ்ராம் அணிந்த பெண் முகத்திரை அணியக் கூடாது; அவள் கையுறைகளையும் அணியக் கூடாது!'' என்று இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ஸஹீஹுல் புஃஹாரி-1838 

மேலே உள்ள ஆதாரங்கள் ஒரு சகோதரர் அனுபியடுதான். இதற்கும் தங்கள் விளக்கம் தந்தால், நானும் மற்ற சகோதரர்களுக்கு சொல்ல வசதியாக இருக்கும். கேள்வியை தனி தனியே பிரித்து கேட்பதற்கு சகோதரர்கள் மன்னிக்கவும். 
----------
From: Mohamed hussain Fazly <fazlylk@Date: 2010/1/19
To: fromgn@googlegroups.com


சஹோதரர் முஸ்லிம் அவர்களே ஒருவரை ஆதாரமாக பின்பற்றுவது தான் தடை ,ஒரே வசனத்துக்கு ஒரே கருத்தில் உள்ள இருவர் முரண்பட்ட விளக்கம் கொடுப்பதை சுட்டி காட்டுவது தப்பு கிடையாது.
தானாக வெளியானதை தவிர அவர்கள் தங்கள் அழகலங்காரத்தை வெளிக்காட்ட வேண்டாம் .இந்த வசனத்தில் நான் வெளியாக்குவது(முத'அத்து)  என்ற வினை கிடையாது ஆரம்பத்திலும் சொன்னேன் லஹர என்றால் எந்த வினை லாஜிமான வினை வெளிப்படுவது, வெளியாக்குவது கிடையாது.இன்னும் விளக்குகிறேன் ஒரு பெண் தனது உடலுறுப்புகள் அனைத்தையும் மறைக்க வேண்டும் அவ்வாறு உடுத்து செல்லும் போது காற்று வீசுவதிநாளோ அதைப்போல வேறு ஏதாவது காரணத்தினாலோ தனக்கு தெரியாமல் முகமோ கை காலோ வேறு ஏதாவது உறுப்போ தெரிந்தால் அது மன்னிக்க படும் இதை விளங்குவதற்கு இரண்டு ஆதாரங்கள்.

ஆயிஷா(ரலி)அவர்கள் கூறினார்கள் நான் என்னுடைய இடத்திலேயே உட்கார்ந்திருந்தேன் எனக்குத் தூக்கம் மிகைத்ததனால் அவ்விடத்திலேயே தூங்கிவிட்டேன்.சப்வான் இப்னு முஅத்தல் அச்சுலமி (ரலி )அவர்கள் படைகளுக்கு பின்னால் முன் இரவில் வந்தார்கள்.நான் இருக்கும் இடத்தை அடைந்ததும் ஒருவர் தூங்கிக் கொண்டிருக்கும் தோற்றத்தைக் கண்டு என்னிடத்தில் நெருங்கி வந்தார்கள்.என்னை கண்டவுடனேயே என்னை அடையாளம் கண்டு கொண்டார்கள்.ஹிஜாப் கடமையாக்க  படுவதற்கு முன்னாள் அவர்கள் என்னை பார்த்திருக்கிறார்கள்.அவர்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டு "இன்னா லில்லாஹி வஇன்னா இலைய்ஹி ராஜிஊன் "என்று கூறினார்கள்..அந்த சப்தத்தை கேட்டு நான் விழித்தெழுந்தேன்.உடனடியாக எனது ஜில்பாப் மூலமாக அவரை விட்டும் என் முகத்தை மூடிக்கொண்டேன் 
                                                                                                                               புஹாரி 4141 முஸ்லிம் 7020

இந்த செய்தி ஆயிஷா (ரலி)அவர்கள் மீது அவதூறு சொல்லப்பட்ட சம்பவத்தின் ஒரு பகுதி. இதில் வரக்கூடிய வாசகத்தை உன்னிப்பாக பாருங்கள் "அவர்  என்னை ஹிஜாப் கடமையாவதற்கு முன்னாள் பார்த்திருக்கின்றார்கள்" இந்த வாசகம் மூலமாக விளங்குவது என்ன ஹிஜாப் கடமையாக்க பட்ட  பின்னால் சப்வான்  (ரலி)அவர்கள் ஆய்ஷா (ரலி) அவர்களை கண்டதில்லை என்பதுதானே.
"நான் எனது   ஜில்பாப் மூலமாக சப்வான்(ரலி) அவர்களை விட்டும்  எனது முகத்தை உடனடியாக மூடிக்கொண்டேன்"
முகம் மூடி ஹிஜாப் அணிவதில் மிகவும் கவனம் செலுத்தி உள்ளார்கள் நபியுடைய மனைவிமார்கள்  முமிங்களின் தாய்மார்கள் அவர்களே இவ்வாறு இருக்கும் போது இந்த காலத்தில்  பெண்கள் எவ்வாறு இருக்கவேண்டும்.

ஆய்ஷா(ரலி)அவர்கள் அறிவிக்கின்றார்கள் ஹிஜாப் கடமை யாக்கபட்டதின் பின் தனது தேவைக் காக சவ்தா(ரலி)அவர்கள் வெளியில் சென்றார்கள்.அவர்களை தெரிந்தவருக்கு மறையாத அளவுக்கு கொளுத்த பெண்மணியாக இருந்தார்கள் உமர்(ரலி)அவர்கள் அவர்களை கண்டு சவ்தாவே அல்லாஹ்வின் மீத சத்தியமாக எங்கள் கண்களைவிட்டு உன்னால் மறைய முடியாது நீ எவ்வாறு வெளியாகிறாய் என்பதை சிந்திப்பீராக எனக்கூறினார்கள் அப்பொழுது நான் திரும்பி வந்தேன் நபி(ஸல்) அவர்களிடம் நான் சென்று நான் எனது தேவைக்காக் வெளியில் சென்றேன் எனக்கு உமர்(ரலி)அவர்கள் இவ்வாறு இவ்வாறு எல்லாம் சொன்னார் என்று சொன்னார்கள் அப்பொழுத் நபிக்கு அல்லாஹ் வஹி அறிவித்தான் நீங்கள் உங்களுடைய தேவைகளுக்கு வெளியாவதற்கு உங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு விட்டது என நபியவர்கள் கூறினார்கள்.
                                                                                                                               புஹாரி 4795  முஸ்லிம்  5668 

இந்த செய்தியில் உமர்(ரலி)அவர்கள், சவ்தா(ரலி) அவர்களை அறிந்து கொண்டது அவர்களின் உடம்பின் பருமனை வைத்துத்தான்.சவ்தா(ரலி)அவர்கள் முகத்தை மூடிதான் வெளியில் சென்றார்கள்.ஆய்ஷா(ரலி)சொல்கிறார்கள் சவ்தா அவர்களை தெரிந்த யார் கண்டாலும் இவர் சவ்தா தான் என்று அடையாளம் கண்டு கொள்ளும் அளவுக்கு பருத்த ஒரு பெண்ணாக இருந்தார்கள்.ஹிஜாப் கடமையாக்க பட்டதின் பின்னால் என்ற வாசகம் கவனிக்கப் படவேண்டும்.

பெரிய ஆச்சரியம் என்னவென்றால்  அந்த ஆயத்தில் இறுதி பகுதியில் தம் அலங்காரத்திலிருந்து தாம் மறைத்திருப்பதை அறியபடுவதட்காக தங்களுடைய கால்களை அடித்து நடக்க வேண்டாம்  என்று அல்லாஹ் சொல்கிறான்.தான் மறைத்திருக்கும் அலங்காரம் வெளியில் தெரிவதையே  கண்டிக்கும் அல்லாஹ் முகத்தில் மை,ரோச்புவ்டார்,கைகளில்தங்க மோதிரம் காப்பு போன்ற ஆபரணங்களால் இன்னும் ஏராளமான மேகப்களை கொண்டு அலங்கரித்து கொள்வது ஏன் காதணி,கால்விரலில் எல்லாம் அணியலாமே முகத்தையும் முன்கையையும் மாத்திரம் ஏன் கூறுகிறீர்கள். காது வேலியாலங்க்காரம் இல்லையா முட்டுக் கை வெளி அலங்காரம் இல்லையா.  இது ஹிஜாபுடைய சட்டத்தையே தலைகீழாக ஆக்குவது போலில்லையா.
ஹிஜாபின் நோக்கம் என்ன ஹதீஸை பாருங்கள் "உமர்(ரலி)அவர்கள் யாரசூலல்லாஹ் உங்களிடத்தில் நல்லவர்களும் கெட்டவர்களும் வந்து செல்கிறார்கள் நீங்கள் மூமீங்களின் தாய்மார்களுக்கு ஹிஜாப் அணிந்து கொள்ளும்படி ஏவினால் நன்றாக இருக்குமே என்று கூறினார்கள் .அப்பொழுது ஹிஜாபுடைய ஆயத்தை அல்லாஹ் இறக்கி வைத்தான் என அனஸ்(ரலி)அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
                                                                                                                                     புஹாரி 4483  
இந்த ஆயத்தின் அடிப்பதில் தான் ஆய்ஷா(ரலி) அவர்கள் சப்வான் சம்பந்தப் பட்ட ஹதீஸில் முகத்தை மூடி மறைத்திக் கொண்டார்கள் ,ஏன் உங்கள் கருத்து பிரகாரம் முகத்தை திறந்தே பேசலாம் அல்லவா.              

----------
From: razin rahman <razinabdul@Date: 2010/1/19
To: fromgn@googlegroups.com


அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்பு சகோதரர்களுக்கு,

மேல்கண்ட இந்த கலந்துரையாடல்,மிக முக்கியமான,ஒரு பிரச்சனையை விவாதிக்கிறது..
இன்ஷா அல்லாஹ் இதில் அல்லாஹ் அனைவருக்கும் தெளிவை தர போதுமானவன்.

இது சம்பந்தமாக நான்,எனது கருத்துகளையும்,சில ஹதீஸ் ஆதாரங்களையும்,சகோதரர்கள், அறியத்தர விழைகிறேன்...

இது ஹிஜாப் பற்றி மற்ற மததினர் கொண்டுள்ள தவறான எண்ணங்களை விட,முஸ்லிம் சமுதாயத்தினர்,கொண்டுள்ள தவறான புரிதலை தெளிவு படுத்த பயன்படும்...

மேலே சகோதரர்கள்,சம்பந்தபட்ட குர் ஆன் வசனங்களை தந்துவிட்டதாலும்,அதில் தரப்பட்ட விளக்கங்கலும், என்னை பொருத்தவரையில் ஏற்றுக்கொள்ளவே முடிகிறது...

மேலும் முகத்தை மூடுவதற்கான மற்றொரு குர் ஆன் வசனமாக 33.59 சொல்லப்படுகிறது....

அதில்
நபியே நீர் உம்மனைவிகளுக்கும், உன் பெண்மக்களுக்கும்,ஈமான் கொண்டவர்களில் பெண்களுக்கும்,அவர்கள் தங்கள தலை முன்றானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக.அவர்கள் (கண்ணியமானவர்கள் என ) அறியப்பட்டு,நோவினை செய்யப்படாமல் இருக்க இது சுலபமான வழியாகும்.மேலும் அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்.மிக்க அன்புடையவன். அல் குர் ஆன் : 33:59

இந்த வசனத்தில் உள்ள "தலை முன்றானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு"எனற கருத்து,தலையை மறைக்க போடப்படும் துணியை குறிக்கிறது.மேலும் முன்றானை என்ற பதம்,பெண்கள் மார்புப்பகுதியை மறைக்க பயன்படும் ஆடையும் கூட,அப்படி இருக்க,அதுவேறு முன்றானை,தலையில் போடப்படுவது வேறு முன்றானை என பகுக்க இயலவில்லை.

பெண்களின் ஆடையை வல்ல அல்லாஹ்,வரையரை செய்யும் போது,அது,உடல் அங்கங்கள் தெரியாத அளவில் தடிமனான ஆடையாக இருக்க பணிக்கிறான்,

அப்படிப்பட்ட ஒரு ஆடையே முன்றானையாக பயன்படுத்த முடியும்,அது போன்ற ஓர் ஆடைகொண்டு,முகத்தை மூடுவதாக பொருள் கொண்டால்,பெண்களை மற்றவர்கள் பார்ப்பது இருக்கட்டும்,முதலில் பெண்கள் யாரையும் அல்ல எதையும் பார்க்கமுடியாத சூழல் உருவாகும்.

அப்படியாயின்,அவர்கள்,வெளியில் செல்லும் போது,பார்வையற்றவரை போலவா சென்றுவர முடியும்..

பெண்கள் விஷயத்தில் அவ்வளவு அருட்கொடைகளை வழங்கியுள்ள வல்ல ரஹ்மான்,இந்த வசனத்தின் மூலம் இது போன்றதொரு பொருள் தந்து,அவர்களை,கூண்டில் அடைக்க எண்ணியிருக்க மாட்டான்..

அல்லாஹ் பேரன்பும் பெரும் கிருபையும் உள்ளவனாயிற்றே...

அல்லாஹ் பெண்களில் ஆடை விஷயத்தில் தெளிவான சட்டத்தை வகுத்துவிட்டு, ஆண்களை,நீங்கள் உங்களின் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுங்கள் என கூறுவதில் இருந்து,பார்க்க கூடாத ஏதோ ஒன்று வெளித்தெரியவே செய்யும்,

அதில் இருந்து உங்களின் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுங்கள் என்றே விளங்கிக் கொள்ள முடிகிறது..

அனைத்தையும் மூடிய நிலையில்,பார்வைகளை தாழ்த்துவது தேவையற்ற ஒன்றே...
இது சரியான ஏற்றுக்கொள்ளக் கூடிய வாதமாகவே உள்ளது..

அதுவல்லாது மேலும் பல ஹதீஸ்கள்,நபியவர்கள் காலத்தில் பெண்கள் முகத்தை மறைக்க வில்லை என்பதையே பற்றி நிற்கிறது...

அவை
ஆய்ஷா (ரலி) அறிவித்தார்கள்.
(நபி (ஸல்) அவர்களின் துணைவியரான) சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) (பர்தா அணிவது சட்டமாக்கப்பட்ட பின் ஒரு நாள்) இரவு நேரத்தில் வெளியே சென்றார்கள்.அவர்களைப் பார்த்து உமர் (ரலி) அடையாளம் புரிந்து கொண்டு, 'சவ்தாவே அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் யார் என்று எங்களுக்கு தெரியாமல் இல்லை" என்று கூறினார்கள்.உடனே சவ்தா (ரலி) நபி(ஸல்)அவர்களிடம் திரும்பி வந்து,அது குறித்து கூறினார்கள்.அப்போது நபி(ஸல்) அவர்கள் என்னுடைய அறையில் உணவருந்திக்கொண்டு இருந்தார்கள்.அவர்கள் கரத்தில் எழும்புத்துண்டு ஒன்று இருந்தது.அந்த சமயத்தில்  அவர்களுக்கு (வஹீ வேத அறிவிப்பு) அருளப்பெற்று (வழக்கம் போல் அதனால் ஏற்படும் சிரம நிலை) அகற்றவும் பட்டது.அப்போது அவர்கள்,"(என் துணைவியரே!) நீங்கள் உங்களின் தேவைகளுக்காக வெளியே செல்ல அல்லாஹ் அனுமதி அளித்துவிட்டான் என்றார்கள்.

ஸஹீஹுல் புஹாரி : 5237

இதே சம்பவம் சகோ ஃபஸ்லி கூறியது போல,புஹாரியில் 4795 லும் பதிவாகியுள்ளது.

அதில் 
,(நபி (ஸல்) அவர்களின் துணைவியரான) சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) வெளியே சென்றார்கள்.அவர்கள்,(உயரமான) கனத்த சரீரமுடைய பெண்ணாக இருந்தார்கள்,என அவர்களின் உடல் அமைப்பு பற்றி குறிப்பிடப்படுகிறது..

ஹதீஸ் எண் 5237 ல்,அவர் இரவு நேரத்தில் வெளிச்சென்றதாக பதியப்பட்டுள்ளது..அல்லாஹ்வின்,சட்ட்ங்களை,சஹாபிப் பெண்மணிகளைவிட சிறப்பாக யாரும் பின்பற்றியிருக்க முடியாது,எனவே,பர்தா சட்டப்படி,அவர்களின் ஆடை,உடல் அங்கங்கள் தெரிய இருக்கமாக இருந்திருக்க வாய்ப்பில்லை,என்பதே எனது கருத்து,

ஹதீஸ் எண் 4795 ல்,உமர் (ரலி) அவர்கள் நீங்கள் (யார் என்று அடையாளம் தெரிகிற வகையில்) எப்படி வெளியே வந்திருக்கிறீர்கள் பாருங்கள் என்று கூறுகிறார்கள்.

இதில் உடல் பருமனான பெண்ணை,அவர் உடலை வைத்து அடையாளம் காணமுடிவதை யாராலும் தடுக்கமுடியாத ஒன்றே...பர்தா அணிந்தும் உடல் பருமனால் அவர் அடையாளம் காணப்படுவது,அவர் மீது குற்றமாகாது, இது உமர் (ரலி) அவர்க்ளும் அறிந்தே இருப்பார்கள்,அப்படி இருக்க அவர்கள் முகத்தை கொண்டே அடையாளம் கண்டு இருக்க முடியும்.(இது எனது கருத்து)
 
மேலும் உமர் (ரலி) அவர்கள் பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னரே,நபி(ஸல்) அவர்களிடம் பர்தா பற்றி வழியுறுத்திய சம்பவங்களை நாம் காண்கிறோம்..அப்படி இருக்க,அவர்கள் பர்தாவை குறித்தே இதை சொன்னார்கள் என தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்..

மேலும் சவ்தா(ரலி) அவ்ர்கள் இது குறித்தே நபி(ஸல்) அவர்களிடம் முறையிட,அல்லாஹ்வின் சட்டம் இறங்குகிறது....அதில் பர்தா பற்றிய கட்டளை சொல்லப்பட வில்லை.பெண்கள் தங்கள் தேவையை முன்னிட்டு வெளியில் செல்லலாம்,என அருளப்படுகிறது.உமர் (ரலி) அவர்களின் அந்த செயல் பொருட்படுத்தப்படவில்லை.என விளங்குகிறது....

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒட்டகத்தில் நபிகள் நாயகத்தின் பின்னால் ஃபழ்ல் பின் அப்பாஸ் (ரலி) அமர்ந்திருந்தார்கள்.அப்போது,ஹஸ்அம் என்ற குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண் வந்தார்.ஃபழ்ல் அவர்கள் அப்பெண்ணை பார்க்கலானார்.அப்பெண்ணும் அவரைப் பார்க்கலானார்.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபழ்ல் அவர்களது முகத்தை வேறு பக்கம் திருப்பினார்கள்.அப்போது அந்தப் பெண்,"அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை முதியவராக உள்ளார்.அவரால் வாகனத்தில் அமரமுடியாது.இந்த நிலையில் அல்லாஹ்,அடியார்கள் மீது விதியாக்கிய ஹஜ் அவர்மீது கடமையாகி விட்டது.எனவே,அவர் சார்பில் நான் ஹஜ் செய்யலாமா? என்று கேட்டார்.அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம் என்றார்கள்.இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கடைசி ஹஜ்ஜின் போது நடந்ததாகும்.

அறிவிப்பாளர்:இப்னு அப்பாஸ் (ரலி)
ஸஹீஹுல் புஹாரி : 1513,1855

இதே நிகழ்ச்சி புகாரியில் 6228 வது ஹதீஸிலும் கூறப்படுள்ளது.அதில் 

அப்போது அந்தப் பெண்ணை ஃபழ்ல் கூர்ந்து நோக்கலானார்.அந்த்ப்பெண்ணின் அழகு அவருக்கு ஆச்சர்யத்தை ஊட்டியது.நபி(ஸல்) அவ்ர்கள் ஃபழ்ல் அவர்களை திரும்பிப் பார்த்தபோது,ஃபழ்ல் அப்பெண்ணை கூர்ந்து பார்ப்பதை கண்டார்கள்.உடனே ஃபழ்லின் முகவாயை தன் கரங்களால் பிடித்து அப்பெண்ணை பார்க்கவிடாமல்,அவரின் முகத்தை திருப்பிவிட்டார்கள்.

என பதியப்பட்டுள்ளது.

இதே ஹதீஸ் திர்மிதீயிலும் 811வது ஹதீஸில்

அப்பெண் இளம் பருவத்து பெண்ணாக இருந்தார் எனக் கூறப்பட்டுள்ளது.

மேற்கண்ட இந்த சம்பவம்.அப்பெண் முகத்தை மறைக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.
மேலும் இது இறுதி ஹஜ்ஜின் போது நடந்தது,என குறிப்பிடப்படுவதால்,பர்தாவின் சட்டம் அருளப்பட்ட பின்னரே நடந்தது எனபதை அறியமுடிகிறது.
அப்பெண் அன்னிய ஆண்களுக்கு மத்தியில்,சபையில் இருந்துள்ளார் என்பதும் விளங்குகிறது,
அவரின் அழகு ஆண்களை கவருவதாக இருந்தது என்பது தெளிவு.
அப்படி இருக்க,அது சமயம் நபியவர்கள்,அப்பெண்ணின் கேள்விக்கே தவிர,வேரெந்த உபதேசமும் கூறவில்லை.முகத்தை அன்னிய ஆண்களுக்கு முன் மூடிக் கொள்ளுங்கள் என்று கூட ஆலொசனை கூறவில்லை.அவரின் முகம் வெளிப்படுவதை அனுமதித்துள்ளார்கள்.
ஆனால் அவரால் கவர்ப் பட்ட,சஹாபியை பார்ப்பதை விட்டும் திருப்பியுள்ள்ளார்கள்.

இங்கு நபி (ஸல்) அவர்கள் பர்தா சம்பந்தமான ஆண்,பெண் சட்டங்களை,முறையாக பேணியுள்ளார்கள்.அதாவது,அல்லாஹ்,அன்னியர்களுக்கு மத்தியில் தானாக வெளிப்படுவதான முகத்தை மறைக்க தேவைஇல்லை என்ற சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளார்கள்.
ஆண்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளவேண்டும் என்ற சட்டத்தை,பின்பற்றாத சஹாபியை அவர் பார்ப்பதை விட்டும் தடுத்துள்ளார்கள்.
என்பது இதன் மூலம் எனக்கு அறியக்கிடைக்கும் தெளிவு.....
அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்.....

ஸஹீஹ் முஸ்லிமில் பதியப்பட்டுள்ள ஒரு ஹதீஸ் இதற்கு மேலும் வலு சேர்ப்பதாகவே அமைந்துள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டேன்.பாங்கும் இகாமத்தும் இல்லாமல் உரை நிகழ்த்துவதற்கு முன் தொழுகையை துவக்கினார்கள்.பின்னர் பிலாலின் மேல் சாய்ந்து கொண்டு இறையச்சம் பற்றி கட்டளையிட்டார்கள்.இறைவனுக்கு கட்டுப்பட வேண்டும் என மக்களுக்கு ஆர்வமூட்டினார்கள்.மக்களுக்கு தேவையான அறிவுரை கூறினார்கள்.
பின்னர்,பெண்கள் பகுதிக்கு வந்து அவர்களுக்கும் அறிவுரை கூற்னார்கள்.தர்மம் செய்யுங்கள்.ஏனெனில் நீங்கள் தான் நரகத்தில் அதிகமாக இருப்பீர்கள்' என்று குறிப்பிட்டார்கள்

அப்போது பெண்கள் பகுதியில் இருந்து,இரண்டு கன்னமும் கருப்பாக இருந்த ஓரு பெண் எழுந்து,ஏன்? என்று கேள்விகேட்டார்கள்.அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,நீங்கள் அதிகமாக குறை சொல்கிறீர்கள்:கணவனுக்கு நன்றி மறக்கிறீர்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர்:ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
ஸஹீஹ் முஸ்லிம் : 1467

இதில் அப்பெண்ணின் முக அமைப்பு பற்றி கூறப்பட்டுள்ளது.அதை அறிவிக்கும் நபித்தோழர்,மற்றும் பிலால் ரலி ஆகிய அன்னிய ஆண்களுக்கு மத்தியில் அபெண் முகத்தை மறைக்காமல் இருந்துள்ளார் என்பதற்கு இது சான்றாக அமைகிறது.
----------------------------------------------------------------------------------------------------------
இதுவல்லாது முகத்தை மூட வேண்டும் என கூறுபவர்கள்,ஃபுக்கஹாக்கள் உருவாக்கிய ஃபிக்கு சட்ட்ங்களையே முன்வைக்கின்றனர்....

நபி (ஸல்) அவர்கள் எதை அனுமதித்தார்களோ அதை தடுக்க,அல்லது அத்ற்கு மேல் அதிக கட்டுப்பாடுகளை விதிக்க யாருக்கும் உரிமை இல்லை,என்பது எனது வலிமையான வாதம்...
அப்படி இருக்க ஃபுக்கஹாக்களின் சட்டம்,அல்லாஹ்வின் கட்டளைக்கும்,நபி (ஸல்) அவர்களில் வழிகாட்டுதலை விட உயர்ந்ததாகவோ,சிறப்பு பெற்றுவிட்டதாகவோ,என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.....

நபி முஹம்மது (ஸல்) அவர்கள்,தனது இறுதிப் பேருரையில்....

மக்களே! சிந்தித்துப் புரிந்து கொள்ளுங்கள்; எனது பேச்சை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். நான் எனது பிரசாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களிடையே அல்லாஹ்வின் வேதத்தை(யும் அவனது தூதரின்
வழிமுறையும்)  விட்டுச் செல்கிறேன்.  நீங்கள் அவற்றைப் பின்பற்றினால், ஒருபோதும் வழிகெட மாட்டீர்கள்!
 
(ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074) (முஅத்தா இமாம் மாலிக்/மிஷ்காத்182... ஸஹீஹுத் தர்கீப் 40.)
 
நபி (ஸல்) அவர்கள் மக்களை நோக்கி, "மறுமை நாளில் உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "நீங்கள் (மார்க்க போதனைகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்து விட்டீர்கள்; (உங்களது தூதுத்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்; (சமுதாயத்திற்கு) நன்மையை நாடினீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிப்போம்" என்றார்கள்.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப் பிறகு, அதை மக்களை நோக்கித் தாழ்த்தி "இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா!
இதற்கு நீயே சாட்சி!" என்று முடித்தார்கள்... 
(ஸஹீஹ் முஸ்லிம் 2334)

இவ்வாறு அவர்கள் கூறிய அதே இடத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கீழ் வருமாறு இறைவசனம் இறங்கியது:"இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்; மேலும், நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும், உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். (அங்கீகரித்துக் கொண்டேன்.)'' (அல்குர்அன் 5:3)
(ஸஹீஹுல் புகாரி 4406, 4407, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா, தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு கஸீர், அத்துர்ருல்
--------------------------------------------------------------------------------------------

இவையே எனது காதுகளில் ரீங்காரம் இட,இதுவல்லாத மற்றதை ஏற்க எனது மனம் விரும்பவில்லை....

பர்தா குறித்த அல்லாஹ்வின் சட்டங்களும்,நபி(ஸல்) அவர்களின் சீரிய வழிகாட்டுதலும்,நம் முன்,உள்ளங்கை நெல்லிக்கனியாய், இருக்க....
அழகிய முறையில் பர்தா அணிந்து,பெண்கள் இருப்பதே,அவர்கள் அல்லாஹ்வின் சட்டத்தை பேணுவதற்கும்,கண்ணியம் பெருவதற்கும்,போதுமானதாகும்.........

அல்லாஹ்வே மிக்க அறிந்தவன், தீர்க்கமான அறிவுடையவன்..

ஹதீஸ்களை அடுத்து எழுதப்பட்டுள்ள விளக்கம்,நான் விளங்கியதே தவிர,வேரில்லை
சகோதரர்கள்,எனது கருத்தில் ஏதேனும் பிழை கண்டால்,சுட்டிக்காட்டவும்,இன்ஷா அல்லாஹ் திருத்திக் கொள்கிறேன்...
அன்புடன்
ரஜின் அப்துல் ரஹ்மான்.

----------
From: Mohamed hussain Fazly <fazlylk@Date: 2010/1/19
To: fromgn@googlegroups.com



 அஸ்ஸலாமு அழைக்கும் சஹோதரர் ராஜின் ரஹ்மான் அவர்களே பெண் முழுமையாக மூடவேண்டும் என்று சொலலகூடியவர்களின் வாதங்களையும் முகம் முன்கை தவிர மற்றதை மறைக்க வேண்டும் என்று சொலலகூடியவர்களின் வாதங்களையும் இங்கு கலந்துரையாடி ஒரு தெளிவான முடிவை நோக்கி செல்வோம்.
இதனுடைய ஆரம்பமே அந்த வசனத்தை கலந்துரையாடினது .

ஒவ்வொரு ஆயத்தாக ஒவ்வொரு ஹதீஸாக வருவோம் இன்ஷா அல்லாஹ்   
----------
From: mohammed tnch <mohammedtnch@Date: 2010/1/21
To: fromgn@googlegroups.com


எனக்கு கிடைத்த ஆதாரம் :- (bukhari, Volume:6 Book:77)
 
இக்ரிமா(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

ரிஃபாஆ அல்குறழீ(ரலி) அவர்கள் தம் மனைவியை மணவிலக்குச் செய்துவிட, அந்தப் பெண்ணை அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர் அல்குறழீ(ரலி) அவர்கள் மணந்தார்கள். (பிறகு நடந்தவற்றை) ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

(ஒரு முறை) அந்தப் பெண்மணி பச்சை நிற முகத்திரை அணிந்துகொண்டு என்னிடம் (வந்து தம் கணவர் அப்துர் ரஹ்மான் தம்மை துன்புறுத்துவதாக) முறையிட்டார். தம் கணவர் தம்மை அடித்ததால் தம் மேனியில் (கன்றியிருந்த) பச்சை நிற அடையாளத்தை எனக்குக் காட்டினார்.
 
-(இக்ரிமா கூறுகிறார்:) பெண்கள் ஒருவருக்கொருவர் உதவுவது வழக்கம் தானே?) அந்த வழக்கப்படி

(நபி(ஸல்) அவர்கள் வந்தபோது, 'இறைத்தூதர் அவர்களே!) நான் (ஆயிஷா) இறைநம்பிக்கையுடைய பெண்கள் சந்திக்கும் துன்பத்தைப் போன்று எங்கும் பார்த்ததில்லை. இவருடைய மேனி (இவருடைய கணவர் அப்துர் ரஹ்மான் அடித்ததால் கன்றிப்போய்) இவரின் (பச்சை நிற முகத்திரைத்) துணியைவிடக் கடுமையான பச்சை நிறமுடையதாக உள்ளது' என்று சொன்னேன். (இதற்கிடையில்) அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர்(ரலி) அவர்கள் தம் மனைவி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று தம்மைப் பற்றி முறையிட்டார் என்று கேள்விப்பட்டார். எனவே, மற்றொரு மனைவியின் மூலமாகத் தமக்குப் பிறந்த இரண்டு மகன்களைத் தம்முடன் அழைத்து வந்தார்.

அப்பெண்மணி, '(இறைத்தூதர் அவர்களே!) அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இவருக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. ஆனால், (தாம்பத்திய சுகத்தில்) இவரிடமிருந்து இதைவிட அதிகமாக ஒன்றும் என்னைத் திருப்திப்படுத்த முடியவில்லை' என்று கூறி, தம் ஆடையின் முந்தானைக் குஞ்சத்தை எடுத்துக் காட்டினார். அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர், 'பொய் சொன்னாள், அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர் அவர்களே! (தாம்பத்திய உறவின்போது) பதனிடப்பட்ட தோலை உதறியெடுப்பதைப் போன்று நான் இவளை (முழுமையாக அனுபவித்து) உதறியெடுத்துவிடுவேன். எனினும், இவள்தான் ரிஃபாஆவை (மீண்டும் மணந்து கொள்ள) விரும்பி எனக்குக் கீழ்ப்படிய மறுக்கிறாள்' என்றார். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அப்படி(ரிஃபாஆவை மீண்டும் நீ மணந்து கொள்ள விரும்பினா)யானால், (உன் இரண்டாம் கணவரான) இவர் உன்னிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்கும் வரை அ(ந்த முதல் கண)வருக்கு நீ 'அனுமதிக்கப்பட்டவள்' அல்லது 'ஏற்றவள்' நீ 'அனுமதிக்கப்பட்டவள்' அல்லது 'ஏற்றவள்' அல்லள்' என்றார்கள். அப்துர் ரஹ்மான் அவர்களுடன் இருந்த அவர்களின் இரண்டு மகன்களையும் நபி(ஸல்) அவர்கள் பார்த்தார்கள். 'இவர்கள் உங்கள் புதல்வர்களா?' என்று (அப்துர் ரஹ்மான் அவர்களிடம்) கேட்டார்கள். அவர், 'ஆம்' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'இவரைப் பற்றியா நீ இப்படிச் சொல்கிறாய்? அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரு காக்கை மற்றொரு காக்கைக்கு ஒப்பாக இருப்பதை விடவும் அதிகமாக இந்தப் புதல்வர்கள் இவரை ஒத்திருக்கின்றனர்' என்றார்கள்.


----------
From: muslim <tomuslim@gmail.com>
Date: 2010/1/21
To: fromgn@googlegroups.com


காற்றில் ஆடை விலகி மறைக்கப்பட வேண்டிய உறுப்புகள் வெளிப்பட்டாலும் அது விதிவிலக்கு. இது ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவான விதி!

''அவர்கள் அலங்காரத்தில் வெளிப்படுவதைத் தவிர வேறு எதையும் அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்''

24:31வது வசனத் தொடரில், மறைக்கப்பட வேண்டிய அலங்காரம், வெளியில் தெரியக்கூடிய அலங்காரம் என இருவகையான அலங்காரத்தைப் பற்றிச் சொல்லப்படுகிறது.

மறைக்கப்படும் அலங்காரம்.

''தலைவிரிகோலமாயிருக்கும் பெண்கள் தலைவாரிக்கொள்ளட்டும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 5079)

24:31வது வசனத்தின் கருத்துப்படி, பெண்கள் கூந்தல் அலங்காரத்தை வெளியில் காட்டக்கூடாது என்பது மட்டும் பொருளல்ல. கூந்தல் தலைவிரிகோலமாக இருந்தாலும் வெளியில் காட்டக்கூடாது. அதாவது கூந்தலை அலங்காரம் செய்தாலும், செய்யாவிட்டாலும் பெண்கள் தலையை மூடி மறைத்துக்கொள்ள வேண்டும். என்பதால் தலைமுடி அலங்கரிக்கப்பட்டிருந்தாலும் அதை அன்னிய ஆடவர்களிடம் வெளிப்படுத்தக்கூடாத - மறைக்கப்பட வேண்டிய அலங்காரம். இதை சிறுமிகள் தவிர, பருவமடைந்த எல்லாப் பெண்களும் கடைபிடித்தாகவேண்டும்.

வெளியில் தெரியும் அலங்காரம் - கண் மை, வளையல், கைச்சங்கிலி, மோதிரங்கள் என நாம் சொன்னதை அவைக் காற்றடித்தால் தனாக வெளிப்படுபவை என விளக்கம் சொல்லியிருப்பது ஏற்கத்தக்கதாக இல்லை!

அலங்காரத்தில் வெளியே தெரியக்கூடியவை என்று சொல்லியிருப்பது இயல்பாக வெளிப்படுத்தலாம் என்ற பொருளைத் தருகிறது. 24:31வது வசனத்தின் முற்பகுதிக்கு சகோதரர் காற்றடித்தலை காரணியாக்காமல்  பொருத்தமான விளக்கம் தரவேண்டும்.

வசனத்தின் முற்பகுதியை அலசிக்கொண்டிருக்கும் போது - //அலங்காரத்திலிருந்து தாம் மறைத்திருப்பதை அறியபடுவதட்காக தங்களுடைய கால்களை அடித்து நடக்க வேண்டாம் என்று அல்லாஹ் சொல்கிறான்.// என வசனத்தின் பிற்பகுதியும் அலசப்பட்டுள்ளது.

மேலும், நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் முகத்திரை அணிந்துள்ளனர், முகத்திரை அணியாமலும் இருந்திருக்கின்றனர். என்பதால் இவற்றைச் சான்றுகளாக்க முடியாது.