Subject: முஸ்லிம் பெண் முகம் மறைத்தல் - கலந்துரையாடல்!
------------------------
From: muslim <tomuslim@Date: 2010/1/18
To: fromgn@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அன்புச் சகோதரர் Mohamed hussain Fazly அவர்களுக்கு, உங்களுடன் சிறு கலந்துரையாடல்.
//24 :31 இல்லாஹ் மா லஹர மின்ஹா இது லாசிமான வினை.இந்த வசனத்தில் இருந்து பொருள் எடுக்க முடியாது முகத்தையும் முன் கையையும் திறப்பதற்கு ஏனெறால் இதற்கு பொருள் தானாக வெளியாவது என்பதே ஒழிய வேண்டுமெண்டே காட்டுவது கிடையாது.இந்த ஆயத்தில் நின்று இவர்கள் விளக்கம் எடுப்பதாக இருந்தால் ஒரு பெண் முகத்தையும் முன்கை உட்பட முழுமையாக மறைக்கப்பட வேண்டும் என்பதே அந்த விளக்கம் . இல்லாஹ் மா லஹர மின்ஹா தானாக வெளியாவதை தவிர மற்றதை காட்ட கூடாது.
முகத்தையும் முன்மநிகட்டும் மறைக்க கூடாது என்பதற்கு இவர்களிடம் என்ன ஆதாரம் என்றால் ஹதீஸில் வந்துள்ளது என்பதே. இந்த ஹதீஸ்களுக்கு விளக்கமாக இந்த ஆயத்தை வலைத்தார்களே ஒழிய இந்த ஆயத்தில் நின்று விளக்கம் கொடுக்கவில்லை. உண்மையான விளக்கம் //
அன்புச் சகோதரர் Mohamed hussain Fazly அவர்களுக்கு, உங்களுடன் சிறு கலந்துரையாடல்.
மேல்கண்டவை
முஸ்லிம் பெண் முகம் மறைத்தல் வேண்டும் என வேறு இழையில் நீங்கள் எழுதிய விளக்கமிது!''இல்லா மா லஹர மின்ஹா'' - ''தானாக வெளியாவதைத் தவிர'' என அர்த்தப்படுத்தியுள்ளீர்கள். ''தானாக வெளியாவதைத் தவிர'' என்றால் அது எவ்வாறு? என்பதை இன்னும் கூடுதல் விளக்கத்துடன் சொல்லுங்கள்.
மேலும், இறைமறை 24:30,31 வசனங்களில் மூஃமினான ஆண்களுக்கும், மூஃமினான பெண்களுக்கும் என இரு பாலினருக்கும் சேர்த்தே பார்வைளைத் தாழ்த்திக் கொள்ளும்படி அல்லாஹ் கூறுகிறான். ஆண் முகம் மறைக்காமல் இருப்பதால் அங்கு பார்வைகள் சந்திக்காமல் இருக்க என்ற கருத்து கொண்டு, பெண்கள் பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும் என்பது சரியே!
பெண்கள் முகத்திரை அணிந்திருந்தால் பார்ப்பதற்கு எதுவுமே இல்லை. எனும்போது ஆண்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும் என்பது இங்கு பொருத்தமாக இல்லை. அதாவது, பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும் என்று சொல்வது ஒரு செயலைத் தவிர்த்துக்கொள்ளும்படி இடும் கட்டளையாகும். அந்தக் கட்டளை இருபாலினருக்கும் பொருத்தமாக இருக்க வேண்டும். ஏனெனில் இரு சாராருக்கும் ஒரே மாதியாக ''பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும்'' எனச் சொல்லப்படுகிறது. இதையும் சற்று விளக்கவும்.
பெண்கள் முகத்திரை அணிந்து பார்வைக்காக கண்கள் மட்டும் திறந்திருக்கலாம் என்று சொன்னால் கண்கள் முகத்தின் ஒரு பகுதியாகும். என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.
குறிப்ப:- இது கலந்துரையாடல் மட்டுமே என்பதால் குழும சகோதர, சகோதரிகள் அனைவரும் மார்க்க ஆதாரங்களின் அடிப்படையில் கருத்துகளை இங்கு பதிவு செய்யலாம்.
From: <ibnuhassan@mail.com>
Date: 2010/1/18
To: fromgn@googlegroups.com
சகோ.....இது சம்பந்தமாக வர உள்ள எனது பதிலில் நான் கேட்க இருந்ததை நீங்களே கேட்டுவிட்டீர்கள்... நன்றிகள்... இதற்கு சகோ....FAZLY , பதில் அளிக்க வேண்டும்....... அத்துடன் முகம் கை மூடனும் என்போருக்கு பல கேள்விகள் உண்டு......பல கேள்விகள் உண்டு...... நான் இசை பற்றிய இழையை பூர்த்தி செய்ய வேண்டி இருப்பதால் , ஆய்வு பதில் தமதம்மாகும்... சகோ..முஸ்லிம் உதவுங்கள்...
----------
From: Mohamed hussain Fazly <fazlylk@Date: 2010/1/18
To: fromgn@googlegroups.com
From: muslim <tomuslim@Date: 2010/1/18
To: fromgn@googlegroups.com
24:31வது வசனத்தில் இடம்பெறும் ''ஜீனத்'' என்ற பதம் ''அலங்காரம்'' எனப் பொருள் தரும். என்றக் கருத்தில் உள்ளேன் என்பதைப் பதிவு செய்துகொள்கிறேன்!
''அலங்காரத்தில் வெளியே தெரிவதைத் தவிர'' என சாதாரணமாக விளங்க வேண்டிய சொற்றொடரை, ''தானாக'' வெளியாவதைத் தவிர என்று அலங்காரம் தானியங்கியாக வெளியாவதைப் போன்று அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு ''தானாக'' வெளியாவது என்பதே நெருடலாக உள்ளது. அதற்கான விளக்கம் தந்தால் நன்று!
மேலும்,
பெண்கள் நான்கு விஷயங்களுக்காக மணமுடிக்கப்படுகிறார்கள். அதில் ஒன்று, ''பெண் அழகுக்காகவும் மணமுடிக்கப்படுவார்'' என்ற நபிவழி அறிவிப்புகள் - புகாரி, 5090, முஸ்லிம் 2905 ஆகிய நூல்களில் - பதிவு செய்யப்பட்டுள்ளன.
பெண் அழகுக்காகவும் மணமுடிக்கப்படுவார் என்பதை வெளிப்படையாக விளங்குவதென்றால் அந்தப் பெண்ணின் அழகைப் பார்த்திருக்க வேண்டும். முகம் உள்பட தன்னை முற்றாக மறைத்துக்கொண்ட பெண்ணிடம் அழகு வெளிப்பட வாய்ப்பில்லை.
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, தாம் அன்சாரிகளில் ஒரு பெண்ணை மணமுடிக்கப் போவதாகத் தெரிவித்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ''நீர் அந்தப் பெண்ணைப் பார்த்து விட்டீரா? ஏனெனில் அன்சாரிகளின் கண்களில் சிறிது (குறை) உள்ளது'' என்றார்கள். அதற்கு அந்த மனிதர் ''அந்தப் பெண்ணைப் பார்த்து விட்டேன்'' என்றார். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) (நபிமொழிச் சுருக்கம். நூல் - முஸ்லிம் 2783, 2784)
திருமணத்திற்காகப் பெண் பார்க்கும்போது பெண் முகத்தைப் பார்க்க நேரடியாக மேல்கண்ட அறிவிப்பு அனுமதிக்கிறது. ஒரு அன்னியப் பெண்ணின் முகம் பார்க்கவும், பார்த்ததாகவும் இந்த செய்தி உறுதிப்படுத்துகிறது. பெண் அழகுக்காகவும் மணமுடிக்கப்படுகிறார் என்பதும் முக அழகையேக் குறிப்பிடுகின்றது என்பது நமது நிலைபாடு.
மாற்றுக் கருத்துடையோர் பகிர்ந்துகொள்ளலாம்.
From: Mohamed hussain Fazly <fazlylk@Date: 2010/1/18
To: fromgn@googlegroups.com
Assalamu Alaikum..
One Doubt brother..
//திருமணத்திற்காகப் பெண் பார்க்கும்போது பெண் முகத்தைப் பார்க்க நேரடியாக மேல்கண்ட அறிவிப்பு அனுமதிக்கிறது.//
Ok.. I accept it..
//ஒரு அன்னியப் பெண்ணின் முகம் பார்க்கவும், பார்த்ததாகவும் இந்த செய்தி உறுதிப்படுத்துகிறது.//
In this versus, what will u come to say?.. Do you say that Islam allows to see a girl/women, even she is proper or not?
----------
From: muslim <tomuslim@Date: 2010/1/18
To: fromgn@googlegroups.com
24:31வது வசனத்தில் வரும் ''ஸீனத்'' என்ற பதம் அலங்காரத்தையே குறிப்பிடும் என்பதை நமது தரப்பில் உறுதிப்படுத்தியுள்ளோம். இயன்றால் உங்கள் சார்பில் கருத்து மாற்றம் இருப்பின் அதைத் தெளிவுபடுத்துவும்.
மேலும், ஆதாரங்களின் அடைப்படையில் கருத்துகள் இருக்கவேண்டும் என்பதை நீங்களும் ஒப்புக்கொண்டுள்ளீர்கள். பிறகு ''அவரு சொல்றாரு, இவரு சொல்றாரு'' என்ற வியாக்கினங்கள் இங்கு அவசியமற்றது.
நாம் கேட்டது ''தானாக'' வெளியாவதைத் தவிர என்று நீங்கள் எழுதிய உங்கள் கருத்தில் ''தானாக'' என்பதின் மேலதிக விளக்கம் தாருங்கள் எனக் கேட்டிருந்தோம் அதற்கு விளக்கம் தாருங்கள்.
24:31வது வசனத்தின் கருத்துப்படி பெண்களின் செயற்கை அலங்காரத்தில் வெளியே தெரியக்கூடியவை - வெளிப்படுத்துவை எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். அலங்காரம் என்பது செயற்கையாகச் செய்வது. கண்ணுக்கு மை இடுதல், கை மணிக்கட்டில் அணியும் வளையல்கள், கைச்செயின்கள், மற்றும் விரல்களில் அணியும் மோதிரங்கள். இவை வெளிப்படும் செயற்கை அலங்காரங்களாகும்.
ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரன் வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது (அதில் தலையிட்டு தமக்காக) வியாபாரம் செய்யவேண்டாம். தம் (முஸ்லிம்) சகோதரன் பெண் பேசிக்கொண்டிருக்கும்போது (குறுக்கிட்டுத்) தமக்காக பெண் பேசவேண்டாம். முதலில் பேசியவர் இவருக்கு அனுமதியளித்தால் தவிர! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்தக் கருத்தில் நபித்தோழர்கள் இப்னு உமர் (ரலி) அபூஹூரைரா (ரலி) இருவரின் அறிப்புகள் புகாரி 2140, 2148, 2150,2151, 2160, 2162,2723, 2727, 5144, 5152, 6601. முஸ்லிம் 2759 - 2765)
முஸ்லிம் நூலில் இடம்பெறும் உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்களின் அறிவிப்பில் ஏற்கெனவே பெண் பேசுபவர் கைவிடும் வரை மற்றவர் தமக்காக பெண் பேசவேண்டாம் என்ற கருத்தில் வாசகங்கள் உள்ளன.
ஒருவர் பெண் பேசும்போது அதேப் பெண்ணைத் தமக்காக இன்னொருவர் பெண் பேச முன்வரக்கூடாது. முன்னர் பேசியவர் அனுமதிக்கும் வரை. அல்லது அவர் கைவிடும் வரை அதில் மற்றொருவர் குறுக்கிட வேண்டாம் என்பது நபி (ஸல்) அவர்களின் வாக்கு!
திருமணத்திற்காக பெண் தேர்வு செய்யும் நேரத்தில் பெண் பேசுபவருக்கு அந்தப் பெண் அந்நியப் பெண்! விருப்பம் இல்லாமல், ஒப்புதல் இல்லாமலும் திருமணம் வரை செல்லாமல் பேச்சு வார்த்தையோடு முடியும் பெண் பேசும், பெண் பார்க்கும் காரியத்தோடும் நின்றுவிடுவதுண்டு.
திருமணத்திற்கு முன்பே பெண்ணைப் பார்த்துக்கொள் என்று ரஸுலல்லாஹ் கூறுகிறார்கள். ''பார்த்துக்கொள்'' அதுவும் முகத்தைப் பார்த்துக்கொள் என்ற அனுமதி, பார்த்த பிறகு பெண்ணிடம் குறை இருக்குமெனில் அதன் பின்னும் பெண் பேசுவதைக் கைவிடலாம், அல்லது மன ஒப்புதலுடன் திருமணம் செய்து கொள்ளலாம். என்றும் விளங்குகிறது.
மேலும், அன்னியப் பெண்ணின் முகத்தைப் பார்க்கலாகாது என்ற சட்டம் குறித்து வரும் அறிவிப்புகள்.
நபிமொழிகள்
''நான் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம், ஏதேச்சையாக (அன்னியப் பெண் மீது) பார்வை விழுவதைப் பற்றிக் கேட்டேன். அப்போது எனது பார்வையை (உடனடியாகத்) திருப்பிக்கொள்ள வேண்டுமென அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்" அறிவிப்பவர் ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) (நூல்கள் - முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத்)
"அலியே! எதிர்பாராது அன்னியப் பெண்ணைப் பார்க்க நேரிட்டால் மீண்டும் பார்க்காதே!. ஏனெனில் முதல் பார்வை உனக்கு (அனுமதிக்கப்பட்டு) உள்ளது. இரண்டாம் பார்வை (அனுமதிக்கப்பட்டது) இல்லை" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் புரைதா (ரலி) (நூல்கள் - திர்மிதீ, அபூதாவூத்)
உங்களில் ஒருவரை ஒரு பெண்(ணின் அழகு) கவர்ந்து அவரது உள்ளத்தில் தவறான எண்ணம் தோன்றினால் உடனே அவர் தம் மனைவியை நாடிச் சென்று அவளுடன் உறவு கொள்ளட்டும். ஏனெனில் அது அவரது மனதில் தோன்றும் (கெட்ட) எண்ணத்தை அகற்றிவிடும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள் - முஸ்லிம் 2718. திர்மிதீ)
இந்த அறிவிப்புகளிலிருந்து, அன்னியப் பெண்ணைப் பார்க்கலாம், தீய எண்ணத்துடன் - சபலத்துடன் பார்க்கலாகாது. தேவையின்றிப் பார்ப்பதே தடைசெய்யப்பட்டதாகும். என்றே விளங்க முடிகிறது.
மூஃமினான ஆண்கள் பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும் (24:30) என்ற வசனத்தின் கருத்திலிருந்தும் எதிரே வருவது பெண்ணாக இருந்தால் பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளட்டும் என ஒரு முறை பார்ப்பதற்கான அனுமதியாகும்.
அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் மீது அவதூறு சுமத்திய செய்தியின் அறிவிப்பில் ஸஃப்வான் இப்னு முஅத்தல் அல் ஸுலமீ (ரலி) அவர்கள் தனியாக தூங்கிக்கொண்டிருந்த ஆயிஷா (ரலி) அவர்களின் முகத்தைப் பார்த்தே இவர் நபியவர்களின் துணைவியார் என்று தெரிந்து கொள்கிறார். (புகாரி 2661)
(அல்லாஹ் மிக அறிந்தவன்)
From: Abu Ali <al_ameen@
Date: 2010/1/19
To: fromgn@googlegroups.com
From: Abu Ali <al_ameen@
Date: 2010/1/19
To: fromgn@googlegroups.com
நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக.அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும்.. மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன். மிக்க அன்புடையவன்.(33:59)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் கூறுகின்றார்கள்
இஹ்ராம் அணிந்த பெண் முகத்திரை அணியக் கூடாது; அவள் கையுறைகளையும் அணியக் கூடாது!'' என்று இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ஸஹீஹுல் புஃஹாரி-1838
From: Mohamed hussain Fazly <fazlylk@Date: 2010/1/19
To: fromgn@googlegroups.com
----------
From: razin rahman <razinabdul@Date: 2010/1/19
To: fromgn@googlegroups.com
வழிமுறையும்) விட்டுச் செல்கிறேன். நீங்கள் அவற்றைப் பின்பற்றினால், ஒருபோதும் வழிகெட மாட்டீர்கள்!
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப் பிறகு, அதை மக்களை நோக்கித் தாழ்த்தி "இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா!
இதற்கு நீயே சாட்சி!" என்று முடித்தார்கள்... (ஸஹீஹ் முஸ்லிம் 2334)
(ஸஹீஹுல் புகாரி 4406, 4407, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா, தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு கஸீர், அத்துர்ருல்
ரஜின் அப்துல் ரஹ்மான்.
----------
From: Mohamed hussain Fazly <fazlylk@Date: 2010/1/19
To: fromgn@googlegroups.com
From: mohammed tnch <mohammedtnch@Date: 2010/1/21
To: fromgn@googlegroups.com
ரிஃபாஆ அல்குறழீ(ரலி) அவர்கள் தம் மனைவியை மணவிலக்குச் செய்துவிட, அந்தப் பெண்ணை அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர் அல்குறழீ(ரலி) அவர்கள் மணந்தார்கள். (பிறகு நடந்தவற்றை) ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(ஒரு முறை) அந்தப் பெண்மணி பச்சை நிற முகத்திரை அணிந்துகொண்டு என்னிடம் (வந்து தம் கணவர் அப்துர் ரஹ்மான் தம்மை துன்புறுத்துவதாக) முறையிட்டார். தம் கணவர் தம்மை அடித்ததால் தம் மேனியில் (கன்றியிருந்த) பச்சை நிற அடையாளத்தை எனக்குக் காட்டினார்.
-(இக்ரிமா கூறுகிறார்:) பெண்கள் ஒருவருக்கொருவர் உதவுவது வழக்கம் தானே?) அந்த வழக்கப்படி
(நபி(ஸல்) அவர்கள் வந்தபோது, 'இறைத்தூதர் அவர்களே!) நான் (ஆயிஷா) இறைநம்பிக்கையுடைய பெண்கள் சந்திக்கும் துன்பத்தைப் போன்று எங்கும் பார்த்ததில்லை. இவருடைய மேனி (இவருடைய கணவர் அப்துர் ரஹ்மான் அடித்ததால் கன்றிப்போய்) இவரின் (பச்சை நிற முகத்திரைத்) துணியைவிடக் கடுமையான பச்சை நிறமுடையதாக உள்ளது' என்று சொன்னேன். (இதற்கிடையில்) அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர்(ரலி) அவர்கள் தம் மனைவி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று தம்மைப் பற்றி முறையிட்டார் என்று கேள்விப்பட்டார். எனவே, மற்றொரு மனைவியின் மூலமாகத் தமக்குப் பிறந்த இரண்டு மகன்களைத் தம்முடன் அழைத்து வந்தார்.
அப்பெண்மணி, '(இறைத்தூதர் அவர்களே!) அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இவருக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. ஆனால், (தாம்பத்திய சுகத்தில்) இவரிடமிருந்து இதைவிட அதிகமாக ஒன்றும் என்னைத் திருப்திப்படுத்த முடியவில்லை' என்று கூறி, தம் ஆடையின் முந்தானைக் குஞ்சத்தை எடுத்துக் காட்டினார். அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர், 'பொய் சொன்னாள், அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர் அவர்களே! (தாம்பத்திய உறவின்போது) பதனிடப்பட்ட தோலை உதறியெடுப்பதைப் போன்று நான் இவளை (முழுமையாக அனுபவித்து) உதறியெடுத்துவிடுவேன். எனினும், இவள்தான் ரிஃபாஆவை (மீண்டும் மணந்து கொள்ள) விரும்பி எனக்குக் கீழ்ப்படிய மறுக்கிறாள்' என்றார். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அப்படி(ரிஃபாஆவை மீண்டும் நீ மணந்து கொள்ள விரும்பினா)யானால், (உன் இரண்டாம் கணவரான) இவர் உன்னிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்கும் வரை அ(ந்த முதல் கண)வருக்கு நீ 'அனுமதிக்கப்பட்டவள்' அல்லது 'ஏற்றவள்' நீ 'அனுமதிக்கப்பட்டவள்' அல்லது 'ஏற்றவள்' அல்லள்' என்றார்கள். அப்துர் ரஹ்மான் அவர்களுடன் இருந்த அவர்களின் இரண்டு மகன்களையும் நபி(ஸல்) அவர்கள் பார்த்தார்கள். 'இவர்கள் உங்கள் புதல்வர்களா?' என்று (அப்துர் ரஹ்மான் அவர்களிடம்) கேட்டார்கள். அவர், 'ஆம்' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'இவரைப் பற்றியா நீ இப்படிச் சொல்கிறாய்? அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரு காக்கை மற்றொரு காக்கைக்கு ஒப்பாக இருப்பதை விடவும் அதிகமாக இந்தப் புதல்வர்கள் இவரை ஒத்திருக்கின்றனர்' என்றார்கள்.
----------
From: muslim <tomuslim@gmail.com>
Date: 2010/1/21
To: fromgn@googlegroups.com
காற்றில் ஆடை விலகி மறைக்கப்பட வேண்டிய உறுப்புகள் வெளிப்பட்டாலும் அது விதிவிலக்கு. இது ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவான விதி!
''அவர்கள் அலங்காரத்தில் வெளிப்படுவதைத் தவிர வேறு எதையும் அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்''
24:31வது வசனத் தொடரில், மறைக்கப்பட வேண்டிய அலங்காரம், வெளியில் தெரியக்கூடிய அலங்காரம் என இருவகையான அலங்காரத்தைப் பற்றிச் சொல்லப்படுகிறது.
மறைக்கப்படும் அலங்காரம்.
''தலைவிரிகோலமாயிருக்கும் பெண்கள் தலைவாரிக்கொள்ளட்டும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 5079)
24:31வது வசனத்தின் கருத்துப்படி, பெண்கள் கூந்தல் அலங்காரத்தை வெளியில் காட்டக்கூடாது என்பது மட்டும் பொருளல்ல. கூந்தல் தலைவிரிகோலமாக இருந்தாலும் வெளியில் காட்டக்கூடாது. அதாவது கூந்தலை அலங்காரம் செய்தாலும், செய்யாவிட்டாலும் பெண்கள் தலையை மூடி மறைத்துக்கொள்ள வேண்டும். என்பதால் தலைமுடி அலங்கரிக்கப்பட்டிருந்தாலும் அதை அன்னிய ஆடவர்களிடம் வெளிப்படுத்தக்கூடாத - மறைக்கப்பட வேண்டிய அலங்காரம். இதை சிறுமிகள் தவிர, பருவமடைந்த எல்லாப் பெண்களும் கடைபிடித்தாகவேண்டும்.
வெளியில் தெரியும் அலங்காரம் - கண் மை, வளையல், கைச்சங்கிலி, மோதிரங்கள் என நாம் சொன்னதை அவைக் காற்றடித்தால் தனாக வெளிப்படுபவை என விளக்கம் சொல்லியிருப்பது ஏற்கத்தக்கதாக இல்லை!
அலங்காரத்தில் வெளியே தெரியக்கூடியவை என்று சொல்லியிருப்பது இயல்பாக வெளிப்படுத்தலாம் என்ற பொருளைத் தருகிறது. 24:31வது வசனத்தின் முற்பகுதிக்கு சகோதரர் காற்றடித்தலை காரணியாக்காமல் பொருத்தமான விளக்கம் தரவேண்டும்.
வசனத்தின் முற்பகுதியை அலசிக்கொண்டிருக்கும் போது - //அலங்காரத்திலிருந்து தாம் மறைத்திருப்பதை அறியபடுவதட்காக தங்களுடைய கால்களை அடித்து நடக்க வேண்டாம் என்று அல்லாஹ் சொல்கிறான்.// என வசனத்தின் பிற்பகுதியும் அலசப்பட்டுள்ளது.
மேலும், நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் முகத்திரை அணிந்துள்ளனர், முகத்திரை அணியாமலும் இருந்திருக்கின்றனர். என்பதால் இவற்றைச் சான்றுகளாக்க முடியாது.