Date: 2009/2/4
To: fromgn@googlegroups.com
----------
From: mustafa haroon <haroon...@gmail.com>
Date: 2009/2/4
To: fromgn@googlegroups.com
வ அலைக்கும் சலாம் . வீட்டில் தனிமையில் இருக்கும் பொழுது தலை திறந்து இருக்கலாம். மணைவியின் பேர் கணவனின் பெயரோடு இணைத்து வைக்கவேண்டும் என்பது தேவையற்ற ஒரு செயல். வேண்டுமென்றால் தனது தந்தையின் பெயரை சேர்க்கலாம்.
யார் முன்னிலையில் ஹிஸாப்(பர்தா) தேவையோ , அவர்கள் யாரும் இல்லாத நேரத்தில் தலை திறந்து இருக்கலாம். கணவன் பெயரை தன் பெயருடன் சேர்ப்பது இஸ்லாமிய வழக்கில் இல்லாத செயல் ஆகும். ஹாரூன்
From: நமக்குள் இஸ்லாம்
To: fromgn@googlegroups.com
ஸலாம்.
முஸ்லிம் பெண்கள் அந்நிய ஆண்களின் (அவர் எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் சரி, நெருக்கமான உறவு முறையாக இருந்தாலும் சரி) முன்னிலையில் உடல் மற்றும் தலையை மறைத்த நிலையிலேயே இருக்க வேண்டும்.
நம் பெண்களில் அதிகமானோர் முஸ்லிம் ஆண்களுக்கு மத்தியில் மட்டும் தலையை முக்காடிட்டு பிற ஆண்களுக்கு மத்தியில் அதைபொருட்படுத்தாமல் இருப்பதை காணலாம். இது முற்றிலும் தவறாகும். பால்காரர்தானே... தயிர்காரர் தானே... தபால்காரர்தானே..மச்சான்தானே... நண்பர்தானே... என்று "தானே" போட்டுக் கொண்டு தலைமுக்காட்டை இறக்கிக் கொள்வது இஸ்லாமிய அடையாளத்தை இழப்பதாகும். எனவே அந்நிய ஆண்களுக்கு முன்னிலையில் தலை முக்காட்டை தவிர்க்கவே கூடாது.
இதுவல்லாமல், தெர்ழுகை மற்றும் ஹஜ் உம்ரா போன்ற அமல்களின் போது பெண்கள் தலையை முக்காடிட்டு மறைக்க வேண்டும்.
மற்ற எந்த சந்தர்பத்திலும் இஸ்லாம் தலைமுக்காட்டை வலியுறுத்தவில்லை.
ஒளுவின் போது
உண்ணும் போது
குடிக்கும் போது
தூங்கும் போது
பாங்கின் போதெல்லாம் நம் பெண்கள் தலைமூடிக் கொள்வதை கடைபிடிக்கிறார்கள். ஆனால் இஸ்லாம் இங்கெல்லாம் தலையில் முக்காடிட வேண்டும் என்று எந்த சட்டத்தையும் வகுக்கவில்லை.
குறிப்பாக ஒளுவின் போது தலை மூடாமல் ஒளு செய்வதே சிறப்பாகும். ஏனெனில் தலைக்கு மஸஹ் செய்யும் போது தலையில் முக்காடிருந்தால் பெண்கள் முக்காடு சரிந்து விடாமல் பிடித்துக்கொண்டே தலையை தடவுகிறார்கள். தலைமுடி முன் பக்கமிருந்து பிடரி வரை தண்ணீரால் தடவுவதே சுன்னத்தாகும். முக்காடை கையில் பிடித்துக் கொண்டு தலையை தடவும் போது இந்த சுன்னத்தை சரியாக செயல்படுத்த முடியாமல் போய்விடும். எனவே பெண்கள் தலையை திறந்த நிலையில் ஒளு செய்வதே சரியாகும்.
இது முதல் கேள்விக்குரிய பதில்.
பெண்கள் தங்கள் பெயருடன் கணவர் பெயரை சேர்த்துக் கொள்ள வேண்டுமா என்பதை பார்ப்போம்.
பெயர் என்ற குறியீடு ஒருவரை அடையாளப்படுத்துவதற்கான வழியாகும். அடையாளப்படுத்துதல் என்பது சில நேரம் சூழ்நிலையைப் பொருத்து மாறுபடும்.
குழந்தைகளை தந்தையின் பெயர்களை மாற்றி அடையாளப்படுத்தக் கூடாது என்று இறைவன் குறிப்பிடுகிறான்.
ادْعُوهُمْ لِآبَائِهِمْ هُوَ أَقْسَطُ عِندَ اللَّهِ فَإِن لَّمْ تَعْلَمُوا آبَاءهُمْ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ وَمَوَالِيكُمْ
நீங்கள் (எடுத்து வளர்த்த) அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெய)ர் களைச் சொல்லி (இன்னாரின் பிள்ளையென) அழையுங்கள் - அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும்; ஆனால் அவர்களுடைய தந்தைய(ரின் பெய)ர்களை நீங்கள் அறியவில்லையாயின், அவர்கள் உங்களுக்கு சன்மார்க்க சகோதரர்களாகவும், உங்களுடைய நண்பர்களாகவும் இருக்கின்றனர் (அல்குர்ஆன் 33:5)
يَا أُخْتَ هَارُونَ مَا كَانَ أَبُوكِ امْرَأَ سَوْءٍ وَمَا كَانَتْ أُمُّكِ بَغِيًّا
وَقَالَ نِسْوَةٌ فِي الْمَدِينَةِ امْرَأَةُ الْعَزِيزِ تُرَاوِدُ فَتَاهَا عَن نَّفْسِهِ قَدْ شَغَفَهَا حُبًّا إِنَّا لَنَرَاهَا فِي ضَلاَلٍ مُّبِينٍ
அப்பட்டினத்தில் சில பெண்கள்; "அஜீஸின் மனைவி தன்னிடமுள்ள ஓர் இளைஞரைத் தனக்கு இணங்கும்படி வற்புறுத்தியிருக்கிறாள்; (அவர் மேலுள்ள) ஆசை அவளை மயக்கி விட்டது - நிச்சயமாக நாம் அவளை பகிரங்கமான வழிகேட்டில் தான் காண்கிறோம்" என்று பேசிக் கொண்டார்கள் அல் குர்ஆன் 12:30
திருமணமான ஒரு பெண்ணை தேவையின் நிமித்தம் அடையாளப்படுத்தும் போது இன்னாரின் மனைவி என்று - தந்தைப் பெயரைத் தவிர்த்து - சுட்டிக்காட்டப்படுகின்றது.
எனவே திருமணமான பெண்கள் தங்கள் பெயருடன் கணவர் பெயரை சேர்த்துக் கொள்வதை தவறென்று சொல்ல முடியாது. அதே சமயம் சிலதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வஹிதா அலி (அலி என்பது கணவர் பெயரா? தந்தைப் பெயரா?) என்று தெரியவில்லை. இந்தக் குழப்பம் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். அலி கணவர் என்றால் வஹிதா w/o அலி என்று எழுதுவதே மிக சரியாகும்.
உறவு முறை சுட்டிக்காட்டப்படாமல் ஒருபெயர் தன் பெயருடன் இணையும் போது அது நாம் வாழும் நாடு போன்ற இடங்களில், பதிவு ஆவனங்களில் (பாஸ்போர்ட், ரேஷன், வங்கி கணக்கு போன்றவை) பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி விடும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
--
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)